மனைவிக்கு பயந்து புகைப்பதை கைவிட்ட அமெரிக்க அதிபர்
நியூயார்க் : மனைவிக்கு பயந்து, சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம், நியூயார்க்கில் துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றினார். பின், அவரை சந்தித்த ஐ.நா., அதிகாரி, ""சிகரெட் வேண்டுமா...'' என, கேட்டார்.
அதற்கு புன்னகையுடன் மறுத்த ஒபாமா, ""நான், ஆறு ஆண்டுகளாக சிகரெட் வைத்து கொள்வதில்லை. மனைவிக்கு பயந்து புகைப்பதை விட்டு விட்டேன்,'' என்றார்.
அமெரிக்க அதிபராக, ஒபாமா பொறுப்பேற்ற புதிதில், அவர் ஓயாமல் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். இவரது இந்த பழக்கம், பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. ""இந்த பழக்கம், என் தந்தையிடம் இருந்து வந்தது,'' என, ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.ஒபாமாவின் மனைவி மிச்சேல், உடல் பருமனை குறைக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, உடல்நலன் குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த விஷயத்தில் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், ஒபாமா, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment