தற்கொலை செய்து கொண்ட ரோபோ!!!
அதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நகரில் உள்ள வீட்டொன்றில் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ரோபோ ஈடுபட்டிருந்தது.
சமீபகாலமாக மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ரோபோவை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தனர்.
இவ்வாறு தொடர் வேலைப்பளுவின் காரணமாக தானாக சமையலைற்கு சென்று அடுப்பை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
இதனால் கட்டிடம் முழுவதும் புகை பரவியதால், அனைவரும் பதறிப்போய் வெளியே வந்துவிட்டனர்.
ரோபோ, தனக்குத் தானே ரீஆக்டிவேட் செய்து தீயில் குதித்திருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment