Translate

Sunday, 15 December 2013

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 3 கோடி இந்தியர்கள்

வாட்ஸ் அப் பயன்படுத்தும் 3 கோடி இந்தியர்கள்
 

இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்புவதில், பன்னாட்டளவில் புகம் பெற்ற அப்ளிகேஷனாக, வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டிவிட்டது என, இந்நிறுவனத்தின் இந்தியக் கிளையின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.
அண்மையில், வாட்ஸ் அப், டாட்டா டொகொமோ நிறுவனத்துடன், தொலை தொடர்பு இயக்கம் சார்ந்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதன் படி, இதன் பயனாளர்களுக்கு, ரூ.15 கட்டணமாகச் செலுத்துவோருக்கு 15 நாட்களுக்கு, அளவற்ற வாட்ஸ் அப் பயன்பாடு வழங்கப்படும். இதனால், வாட்ஸ் அப் பயனாளர் எண்ணிக்கை கணிசமாக இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கருதுகிறது.
டாட்டா டொகொமோ தன் வாடிக்கையாளர்களுக்கு, இணைய தள அடிப்படையில் சில திட்டங்களை வழங்குகிறது. ஜிமெயில் + ஜிடாக், யாஹூ மெயில்+ யாஹூ மெசேஜ், ரீ டிப் மெயில், பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டுஇன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் ஆகியவற்றின் பயன்பாட்டினை, 30 நாட்களில் பயன்படுத்தும்படி, 200 எம்பி டேட்டாவிற்கு ரூ.10 கட்டணத்தில் வழங்குகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஓராண்டுக்கு முன்னர், அதன் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்களுக்கு, மாதத்திற்கு ரூ.16 கட்டணத்தில், அளவற்ற வாட்ஸ் அப் பயன்பாட்டினை வழங்கியது. அப்போது வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது.
இப்போது வாட்ஸ் அப் சேவையைத் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக, இந்தியாவில் 3கோடி பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 2 கோடியாக இருந்தது. ஆனால், பேஸ்புக் பயன்படுத்தும் 8 கோடியே 40 லட்சம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், வாட்ஸ் அப்பின் 3 கோடி என்பது மிகச் சாதாரணமான ஒன்றாகும்.

No comments:

Post a Comment