மது அருந்தினால் கார் ஸ்டார்ட் ஆகாது: புதிய தொழில்நுட்பம் வெற்றி பெறுமா?
மது அருந்தியவர்கள் கார் ஓட்டுவதை தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் சாலை பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், கட்டுப்பாடுகள் இருந்தாலும் பலன் இல்லை.
குடிபோதை விபத்துக்களை முற்றிலுமாக தவிர்க்கும் விதத்தில் தற்போது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் படி, மது அருந்தியவர் காரின் இருக்கையில் அமர்ந்தால், கார் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாது. ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலமாக மூச்சுக் காற்றை வைத்தும், ஸ்டீயரிங் வீலை தொடும்போதும், மது அருந்தியதை கண்டுபிடிக்கும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளிலும் கார் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment