நளினிக்காக முருகன் சிறையில் உண்ணாவிரதம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள்.
இன்று காலை 7.45 மணிக்கு முருகன் பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினியை சந்தித்து பேசினார்.
அப்போது முருகனிடம் நளினி தன்னை சிறையில் பார்க்க வருபவர்களை சரியாக பார்க்க அனுமதிப்பது இல்லை என்றும் மேலும் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என்றும் தெரிவித்தார். இதை கேட்ட முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் சிறையில் இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக முருகன் கூறினார்.
பின்னர் அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்தார். மதிய உணவு சாப்பிட மறுத்தார்.
சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags: உண்ணாவிரதம், சிறை, நளினி, முருகன்
No comments:
Post a Comment