டி.என்.பி.எல்., நிறுவன காலியிடங்கள்
கரும்பாலைகளில் இருந்து கிடைக்கும் பொருளைக் கொண்டு காகிதம் தயாரித்திடும் தமிழ் நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேப்பர் லிமிடெட் எனப்படும் டி.என்.பி.எல்., நிறுவனம் 80களில் நிறுவப்பட்டது. இன்றளவில் காகித உற்பத்தியில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல பிரிவுகளில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் அதிகாரி பதவிக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: டி.என்.பி.எல்., நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் - டிரெய்னி பதவிக்கு கெமிக்கலில் 10ம், மெக்கானிகலில் 5ம், எலக்ட்ரிகலில் 3ம், இன்ஸ்ட்ரூமென் டேஷனில் 5ம், என்விரான்மென்டலில் 1ம், ஆர் அண்டு டி - ஆபிஸர் பதவியில் 3ம், பர்சேஸ் ஆபிசர் பிரிவில் 3ம், ஆபிசர் பிரிவில் பிளாண்டேஷன் அண்டு பாரஸ்ட்ரி பிரிவில் 2ம் காலி இடங்கள் உள்ளன.
வயது: தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓ.பி.சி., மற்றும் எஸ்.சி. எஸ்.டி., பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சலுகை உள்ளது.
தகுதி: கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி பதவிக்கு தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு தேவை. ஆபிசர் பதவிக்கும் இதே போல் இன்ஜினியரிங் பட்டம், சிறப்பு படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்பு போன்றவை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இரண்டு வருட கால பயிற்சி கொண்ட இந்த பதவிக்கு முறையான படிவ மாதிரியில் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதவி கிடைக்கும் பட்சத்தில் கரூரில் உள்ள காகிதபுரத்தின் ஆலையில் பணி புரிய வேண்டும்.
விபரங்களுக்கு: http://www.tnpl.com/ Careers/ hr%20advt%2011dec2013.pdf>
விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.12.2013
No comments:
Post a Comment