Translate

Monday, 9 December 2013

எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள குரூப் சி பணிகள்

எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள குரூப் சி பணிகள்

இந்திய அரசின் அரசுப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக மல்டி டாஸ்கிங் ( நான்-டெக்னிகல்) குரூப் சி 2014க்கான தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 01.01.2014 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ்2 அளவிலான படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஸ்டாப் செலக்சன் கமிஷனின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/- சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ஆப்-லைன் அல்லது ஆன்-லைன் என்ற 2 முறைகளில் ஏதாவது ஒன்றில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை எந்த மண்டலத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Regional Director
(SR), Staff Selection Commission, EVK
Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu - 600006
தேர்ச்சி முறை : 2 நிலைகளிலான தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வு 16.02.2014/23.02.2014 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள் : முதல் பகுதிக்கு 11.12.2013 அன்றும் 2ம் பகுதிக்கு 13.12.2013க்கும் இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment