Translate

Sunday, 15 December 2013

கப்பற்படை அறிவித்துள்ள இன்ஜினியரிங் கல்வி வாய்ப்பு

கப்பற்படை அறிவித்துள்ள இன்ஜினியரிங் கல்வி வாய்ப்பு

நமது தேசத்தின் பெருமைமிகு அடையாளங்களில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. நமது நாட்டில் மட்டுமன்றி பலராலும் தனது சிறப்புகளுக்காக இந்தப் படை அறியப்படுகிறது. இந்தப் படையில் 2014 முதல் கேரள மாநிலம் எழிமலாவில் துவங்கவுள்ள பி.டெக்., - கேடட் என்ட்ரி ஸ்கீமுக்காக திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 02.01.1995 முதல் 01.07.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி, ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும். அடுத்த மே மாத வாக்கில் இது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சி: எஸ்.எஸ்.பி., நேர்காணலில் வெற்றி பெறுபவர்கள் நான்கு வருட பி.டெக்., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், நேவல் ஆர்க்கிடெக்சர் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இந்தப் படையில் தொடர வேண்டும். பட்டப் படிப்பை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வழங்கும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: ஆன்-லைன் முறையில் 05.01.2014
விபரங்களை அறிய: www.nausena&bharti.nic.in
<http://www.nausena&bharti.nic.in>

No comments:

Post a Comment