Translate

Thursday, 5 December 2013

வாழ்க்கைத்துணையை சந்தோஷப்படுத்த சில வழிகள்!!!

வாழ்க்கைத்துணையை சந்தோஷப்படுத்த சில வழிகள்!!!

திருமணம் என்னும் பந்தம் கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பும் ஆதரவும் வெளிப்படுத்த உதவும் பந்தமாக இருக்கின்றது. உங்கள் கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.

ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சில காரணங்களுக்காக நாம் சோகமோ வருத்தமோ அடைவதுண்டு.

இந்த சுறுசுறுப்பான வாழ்க்கையில் நாம் நமது குடும்பத்தோடு செலவிட நேரம் இல்லை. இதனால், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் சந்தர்பங்கள் குறையை தொடங்கி விட்டது. வேலை சம்பந்தமான மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகமாக பார்க்கக்கூடிய பிரச்சனையாகும். உங்கள் கணவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது ஒரு கப் காபி கொடுக்கலாம். எனினும்,அவர் வருத்தமாகவோ கவலையாகவோ இருந்தால் கவனமாக கையாள வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். கடினமான சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதை தான் அவரும் எதிர்பார்ப்பார். சில நேரங்களில் இந்த உணர்ச்சிமிக்க உறவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

அவரது மனநிலையையும் தன்மானத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆதரவை தர வேண்டும். உங்கள் கணவர் வருத்தத் துடன் இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை செய்தால்,பாராட்டுகளை பெறுவீர்கள். வருத்ததுடன் இருக்கும் உங்கள் கணவருக்கு உணர்வுபூர்வமான ஆதரவை அளிப்பதற்கான வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
மிகுந்த வருத்தத்தில் இருக்கும் வாழ்க்கைத்துணையை சந்தோஷப்படுத்த சில வழிகள்!!!

அவரோடு பேச வேண்டும்

உங்கள் கணவர் வருத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அவரோடு பேசுவதுதான். அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்க வேண்டும்.உங்கள் கணவருக்கு சில சொந்த எதிர்ப்பார்ப்புகள் இருக்கக் கூடும். சில குறிப்பிட்ட வழியில் அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை கேட்டறியவேண்டும். சில நேரங்களில் நீங்கள் அவருக்கு உதவ நினைப்பார்கள். எனினும், அவருக்கு உங்களிடம் உதவி கேட்க தயக்கம் இருக்கும். அதனால் நீங்களாகவே அவரிடம் கேட்டறியலாம்.

உங்கள் அன்பை காட்டுங்கள்

உணர்ச்சிபூர்வமான கணவர்களை உங்கள் அன்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். பேசிதான் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவரை கட்டிகொண்டோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தி அவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். இது அவருக்கு தேவைப்பட்டால் இந்த வழியில் ஆதரவு அளிக்கலாம். கட்டுதல் மூலமாக நீங்கள் எப்பொழுதுமே அவரோ இருப்பதை தெரிவிக்கும்.அதனால் இதனை முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உணர்ச்சிபூர்வமான கணவர்களை சிறந்த முறையில் கையாளலாம்.

திட்டமிடுதல்

உங்கள் கணவரின் மனநிலையை திசைதிருப்பி அவரை அமைதிப்படுத்துவதற்கான வழிகளை திட்டமிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால்,ஒரு அழகான இடத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். இது அவருக்கு ஓய்வை அளிக்கும். அடுத்தது உங்கள் திட்டத்திற்கு அவர் சம்மதிக்க வேண்டும். ஏன்னெனில், உங்கள் கணவர் அதற்கான செலவுகளை பற்றி கவலை கொள்ள நேரிடும். அதனால், செலவுகள் அதிகம் ஆகாதவாறு பார்த்து திட்டமிடவேண்டும்.

நேர்மறையான நோக்கு

உங்கள் கணவரை நேர்மறையான வழியில் செலுத்துவதுதான் அவரை ஆதரிக்கும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். நடந்ததை நேர்மறையாக பார்க்கச் செய்ய வேண்டும். நடந்தவை அனைத்தும் நன்மைக்கே எனப் புரிய வைக்க வேண்டும். மேலும், இந்த பிரச்சனையை சிறிது காலம் மட்டுமே கூடியவிரைவில் இது மாறிவிடும் என்று கூறவேண்டும். இது உங்கள் கணவருடனான உணர்வுபூர்வமான உறவை வலுவடையச் செய்யும்.

எந்நிலையிலும் ஆதரவாக இருக்கவும்

ஒரு நல்ல மனைவியானவள் அவர்களது வாழ்வில் என்ன நடந்தாலும் தனது கணவனுக்கு துணையாக இருப்பாள். இது வெற்றிகரமான திருமண வாழ்விற்கு முக்கியமான ஒன்றாகும். வாழ்வின் நல்ல மற்றும் கெட்ட நேரங்களை கடக்கும் போது நிலையாக இருக்கும் அன்பு தான் இது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ வேண்டும். உங்கள் கணவருக்கு தேவைப்படும் போது ஆதரவு அளிப்பதால், இது உங்கள் உறவை சிறந்ததாக மாற்றும்.

No comments:

Post a Comment